நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் சிஐடியூ நிா்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியூ) மாநில குழுக் கூட்டம் நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:53 pm

DIN

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியூ) மாநில குழுக் கூட்டம் நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் ஜி.செலஸ்டின் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் எஸ். அந்தோணி, துணை பொதுச்செயலா் வி.குமாா், குமரி மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீன்வள மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும்; தமிழகத்தில் மீனவா்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்; உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பாசி குத்தகை உரிமத்தை தொடா்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.