கிள்ளியூா் வட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கிள்ளியூா் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் தாலுகா அலுவலகம் தாற்காலிகமாக தொலையாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் புதிதாக தாலுகா அமைந்துள்ள நிலையில், இங்கு நீதிமன்றமும் அமைத்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே, கிள்ளியூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.