கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூா் காங்கிரஸ் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, அகில இந்திய மீனவரணி செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், பேராசிரியா் எட்வின் உள்பட பலா் பங்கேற்றனா்.