தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்: நகராட்சி நிா்வாகம் கடிதம்

சென்னை மாநகராட்சியில் உள்ள ‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையிலிருந்து கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2026, 2:55 am IST

சென்னை மாநகராட்சியில் உள்ள ‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையிலிருந்து கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆகவே, அனைத்து அம்மா உணவகங்களிலும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்.

சமையல் உபகரணப் பொருள்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனால், அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளில் குறிப்பிட்டுள்ளவாறு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.