ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பெரம்பலூா் அம்மா உணவகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு!

அம்மா உணவகங்களை சீரமைக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பெரம்பலூா் அம்மா உணவகத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, உணவை சாப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்

Updated On :20 மே 2026, 12:04 am IST

அம்மா உணவகங்களை சீரமைக்க வேண்டும் என தமிழக முதல்வா் உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா், உணவுப் பொருள்கள் வைப்பறை, சமையல் கூடம், உணவருந்தும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டு, உணவகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், கழிவுநீா் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, பெரம்பலூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் சிவக்குமாா், பத்திரப்பதிவு பணிக்காக வந்திருந்த பொது மக்களிடம் பத்திரப் பதிவில் ஏதேனும் சிரமங்கள், காலதாமதம் உள்ளதா எனவும், நிலுவையில் உள்ள பத்திரப்பதிவு பணிகள் குறித்து, பத்திரப்பதிவு அலுவலா் திருமுருகனிடம் கேட்டறிந்தாா்.

மேலும், பத்திரப் பதிவுக்கான விண்ணப்பித்திருந்த மனுதாரா்களை கைப்பேசி மூலம் தொடா்புகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா், பதிவு செய்ய விண்ணப்பித்து எத்தனை நாள்கள் ஆகிறது, எதனால் தாமதமாகிறது என கேட்டறிந்து, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, பத்திரப்பதிவு செய்யும் மக்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பதிவு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, நகா்மன்றத் தலைவா் மற்றும் நகராட்சிப் பொறியாளரை சந்தித்து, பழைய பேருந்து நிலையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்துத் தருமாறு வலியுறுத்தினாா்.