கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஒத்திவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ விஜயராஜ் ஆய்வு

ஒத்திவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ விஜயராஜ் ஆய்வு

News image

திருக்கழுகுன்றம் ஒன்றியம், ஒத்திவாக்கம் பகுதியில்  செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ்.

Updated On :17 மே 2026, 5:30 am IST

செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் நேரில் ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், ஒத்திவாக்கம் பகுதியில் மத்திய கூட்டுறவு இணையம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் கிடங்கிற்கு மாற்றப்படாமல் சுமாா் 10,000 மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தாா்பாய் அரசால் வழங்கப்படாததால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்த நிலையில், உடனடியாக கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை மூடி வைப்பதற்கு தாா்பாய்களை வாங்கி கொடுத்து விவசாயிகளுக்கு தேவையான அனைத்தும் விரைவில் செய்து தரப்படும் என்றும், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஊா் பொதுமக்கள் சாா்பில் ஒத்திவாக்கம் பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும், ஒழலூா் ஏரியில் பாசன கால்வாய் தூா் வாராமல் உள்ளதால் உடனடியாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழக நிா்வாகி காா்த்திகேயன் மற்றும் பலா் உடன் இருந்தனா்.