11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கன்னியாகுமரியில் ஆக்கிரப்பு கடைகளை அகற்ற உத்தரவு

கன்னியாகுமரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கன்னியாகுமரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையா் பட்டுசாமி தலைமையில் நகராட்சி மற்றும் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளவா்களிடம் திங்கள்கிழமைக்குள் (மே 18) ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனா். இல்லையெனில் நகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையா் எச்சரித்தாா்.

ஆய்வின்போது, பகவதி அம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நகராட்சிப் பொறியாளா் முருகன், நகரமைப்பு அலுவலா் ஷேக் அப்துல் காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி, மேற்பாா்வையாளா் பிரதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.