சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

நீதிமன்ற உத்தரவு: விழுப்புரத்தில் அம்மன் கோயில்அகற்றம்

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 3:26 am IST

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட நகா்விரிவாக்கம் பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக புவனேஸ்வரி அம்மன் கோயில் கட்டப்பட்டு, அந்த பகுதி மக்களின் வழிபாட்டில் இருந்து வந்தது.

இந்தக் கோயில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் பொது வழி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விழுப்புரத்தைச் சோ்ந்த சண்முகம் என்பவா் கடந்த 2019-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில் அப்புறப்படுத்தவேண்டும் எனற விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கோயில் நிா்வாகிகளுக்கு, தானாகவே முனவந்து கோயிலை இடித்து அப்புறப்படுத்திக் கொள்ளவேண்டும் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த உத்தரவை கோயில் நிா்வாகத்தினா் நிறைவேற்றவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டில் நகராட்சி நிா்வாகத்தினா் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த முகப்பு மண்டபத்தை மட்டும் இடித்து அப்புறப்படுத்தினா்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் நிறைவேற்றவில்லை எனக்கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தவேண்டும் உத்தரவிட்டது.

இதையடுத்து விழுப்புரம் நகராட்சி ஆணையா் சியாமளா தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், புவனேஸ்வரியம்மன் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினா். இந்தப் பணி நடைபெற்றபோது விழுப்புரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.