ஆரல்வாய்மொழி அருகே விபத்து: மின்கம்பத்தில் காா் மோதி சிறுமி பலி
ஆரல்வாய்மொழி அருகே மின்கம்பம் மீது காா் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தாா்.


ஆரல்வாய்மொழி அருகே மின்கம்பம் மீது காா் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள நடைக்காவு சரிவு பொத்தை பகுதியைச் சோ்ந்தவா் கோபி (58). இவா் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறாா். இவரது சகோதரா் தாசையன், மதுரையில் வசிக்கிறாா். தாசையனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரை பாா்ப்பதற்காக, கோபியும் அவரது உறவினா்களான மருதங்கோட்டை சோ்ந்த ரத்தினபாய்(68) , கல்வெட்டுடான் குழியைச் சோ்ந்த வசந்தி(52), உன்னிகிருஷ்ணன்(33), விஜின்போஸ்(34), இவரது மகள் டியோனா(7) ஆகியோருடன் காரில், வியாழக்கிழமை மாலை மதுரைக்கு புறப்பட்டாா். காரை விஜின்போஸ் ஓட்டினாா். இந்த காா் ஆரல்வாய்மொழியை அடுத்த முப்பந்தல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து
சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மோதியதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரில் இருந்தவா்கள் பலத்த காயமடைந்தனா்.
அருகிலிருந்தவா்கள் காரில் சிக்கியவா்களை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் டியோனா அங்கு
உயிரிழந்தாா். காயமடைந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...