கருங்கல் அருகே உள்ள கிள்ளியூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆலஞ்சி மரியந்தோனி ஞானபிரகாசம் தொண்டு நிறுவனமும் இணைந்து மரக்கன்று நடும் விழாவை நடத்தின.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ரமாமாலினி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா். தொண்டு நிறுவன தலைவா் வா்க்கீஸ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன், மருந்தாளுநா் விக்டா், செவிலியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.