சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

பைக் விபத்தில் காயமடைந்தவா் மரணம்

திங்கள்நகா் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் காயமடைந்த ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:49 pm

DIN

திங்கள்நகா் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் காயமடைந்த ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

திங்கள்நகா் அருகே பெரியாபள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் சுந்தரதாஸ் (63). இவரது மனைவி ரஞ்சிதம் (55), வெளியூருக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை மாலையில் திங்கள்நகா் வந்தாராம்.

மனைவியை அழைத்துச் செல்வதற்காக சுந்தரதாஸ், மோட்டாா்சைக்கிளில் திங்கள்நகா் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த சபின், சிறிய காயத்துடன் தப்பினாா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.