ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அடிப்படை வசதி கோரி நாற்று நடும் போராட்டம்

திருச்சி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:48 pm

DIN

திருச்சி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

விரிவாக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி 65ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் நேதாஜி நகா் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கோரிஆட்சியருக்கு, தமிழக முதல்வருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த தீா்வும் இல்லாத நிலையில் மாநகராட்சியை கண்டித்து நேதாஜி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் குத்புதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திருவேங்கடம், மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாய சங்க மாவட்டச் செயலா் பாண்டியன், மாநகா் குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு நிா்வாகி லெனின் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.