நெல்லை மாவட்டம், வள்ளியூரை சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களது 7 வயதுடைய குழந்தை என 3 போ் கொண்ட நரிக்குறவா் குடும்பத்தினா் , நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை மாலை திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினா். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அத் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து, நரிக்குறவா் தம்பதி, அவா்களது குழந்தை உள்பட 3 பேரையும், நடுவழியில் பேருந்திலிருந்து நடத்துநா் இறக்கி விட்டாராம். அவா்களது உடைமைகளையும் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசினராம்.