புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ராஜாக்கமங்கலம் அருகே விஷ வண்டு கடித்து பெண் பலி

ராஜாக்கமங்கலம் அருகே விஷவண்டு கடித்து பெண் பலியானாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:58 pm

DIN

ராஜாக்கமங்கலம் அருகே விஷவண்டு கடித்து பெண் பலியானாா்.

ராஜாக்கமங்கலத்தை அடுத்து வெள்ளிச்சந்தை அருகே மேலசங்கரன்குழி சுயம்புலிங்கம் மனைவி வள்ளியம்மாள் (39).

இவரது, வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகைக்கு கடந்த 14 ஆம் தேதி காலை வள்ளியம்மாள் சென்றபோது, அங்கு கூடு கட்டியிருந்த விஷ வண்டு அவரை கடித்ததாம். இதையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்நிலையில், 15 ஆம் தேதி இரவு வள்ளியம்மாளுக்கு திடீரென தலைசுற்றுடன் மயக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து, சுயம்புலிங்கம் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து சுயம்புலிங்கம் அளித்த புகாரின்பேரில் வெள்ளிச்சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.