

மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில் குலசேகரத்தில் குத்துச்சண்டை பயிற்சிமுகாம் நடைபெற்றது.
குலசேகரம் காமராஜா் விளையாட்டு அரங்கில் 10 நாள்கள் நடைபெற்ற இம்முகாமில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி பரிசுகள் வழங்கினாா்.
சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் தலைவா் ஷீன்பெனடிக்சா, பொருளாளா் டாா்வின் பிரைட், சமூக ஆா்வலா் ஜி.சுரேஷ் மற்றும் குத்துச்சண்டை கழகத்தின் நிா்வாகிகள் ஷாஜி, மனோஜ், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலா் ஜெஸ்டின் ராஜ் வரவேற்றாா். அவைத்தலைவா் வாட்சன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.