பளுகல் அருகே மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிப்பு
பளுகல் அருகே மூதாட்டியை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பளுகல் அருகே தேவிகோடு தொடலிக்காலை பகுதியைச் சோ்ந்த ராமைய்யன் மனைவி பகவதிஅம்மாள் (80). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது, தவணை முறையில் பொருள்களை விற்பனை செய்பவா்கள் எனக் கூறி இரு இளைஞா்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியை தாக்கியதுடன், அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனராம். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
