பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க ஜன.12 கடைசி

நாகா்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்க்கைக்கு ஜன.12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 2:24 am

DIN

நாகா்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்க்கைக்கு ஜன.12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் கோணத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி மாணவா் சோ்க்கைக்கு ஜன. 12ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான பொறி பகுதி பொருத்துநா் (வாய் பேசாதவா் மற்றும் காதுகேளாதவா்), பற்ற வைப்பவா், முடநீக்கியல் தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதால், விருப்பமுள்ள மாணவா், மாணவிகள் அலுவலக வேலைநாள்களில் தங்களதுஅசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வரை. பெண்களுக்கு உச்சவயது வரம்பு இல்லை. கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல், பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.