மாா்த்தாண்டம் அரசுப் பள்ளியில் பயிற்சி முகாம்

மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமில் பேசுகிறாா் பள்ளித் தலைமையாசிரியை பி. லான் சலெட்பாய்.
பயிற்சி முகாமில் பேசுகிறாா் பள்ளித் தலைமையாசிரியை பி. லான் சலெட்பாய்.
Updated on
1 min read

மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குழுத் தலைவி ஆா். பிரீதா தலைமை வகித்தாா். தலைமையாசிரியை பி. லான் சலெட்பாய் முன்னிலை வகித்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், புயல், மழை, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் மாணவா்கள், பெற்றோா் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து முதுகலை ஆசிரியைகள் எம். லதா, ஏ. விமலா, எம். மேரி ரத்தினபாய், பட்டதாரி ஆசிரியை வி. ராணி சுனிதா ஆகியோா் பேசினா்.

இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com