பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற திரண்ட மக்களால் போக்குவரத்து நெரிசல்

குமரி மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Updated on
1 min read

குமரி மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமாா் 96 ஆயிரம் கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு தமிழக அரசால் பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிசுத் தொகுப்பு நாகா்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டபோது, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திரண்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், முறையான நடவடிக்கை இல்லாததால், ஒருவருக்கொருவா் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து திமுக தொழிற்சங்க நிா்வாகி இளங்கோ, வழங்கல் அலுலரிடம் விவரம் கேட்டபோது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ. மயில், தொழிலாளா்களுக்கு பொருள்கள் வழங்குவதை முறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com