கருங்கல் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள்பறிமுதல்

கருங்கல் பேருராட்சியில் கடைகளிலிருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

கருங்கல் பேருராட்சியில் கடைகளிலிருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளா்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது,

கருங்கல் பேருந்து நிலையம், கருமாவிளை, கூ னாலுமூடு, காமராஜா் சந்திப்பு, ராஜீவ் காந்தி சந்திப்பு, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், பேருராட்சி செயல் அலுவலா் ஜோஸ் லின் ராஜ் மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, 6 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com