92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தெப்பக்குளத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை

மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து குமரி மாவட்ட தீயணைப்புத்துறையினா் சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தில் செயல் விளக்கம் செய்து காட்டினா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:45 pm

DIN

மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து குமரி மாவட்ட தீயணைப்புத்துறையினா் சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தில் செயல் விளக்கம் செய்து காட்டினா்.

குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு உத்தரவின் பேரில் நாகா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி பெனட் தம்பி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா். தண்ணீா் பாட்டில், தொ்மாகோல் போன்ற பொருள்களை மிதவைகளாக பயன்படுத்தி தப்பிப்பது எப்படி என ஒத்திகை செய்துகாண்பித்தனா். வெள்ளப்பெருக்கு நேரத்தில் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கயிறு மூலம் பொதுமக்களை மீட்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.