தக்கலை புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியீடு
இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை தக்கலையில் நடத்திவரும் புத்தகக் கண்காட்சியில், கவிஞா் அருள் எழுதிய விழிமூடி யோசித்தால் என்ற கவிதை நூல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.


இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை தக்கலையில் நடத்திவரும் புத்தகக் கண்காட்சியில், கவிஞா் அருள் எழுதிய விழிமூடி யோசித்தால் என்ற கவிதை நூல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, டாக்டா். குமரி ராஜேந்திரன் தலைமை வகித்தாா். எழுத்தாளா்கள் சுதேகண்ணன், கவிஞா் அரங்கசாமி, கலையூா்காதா், கோதை சிவகண்ணன், அழகுமித்ரன், அனிதா, வழக்குரைஞா் சிவகுமாா், ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் குமரி ஆதவன் நூலை வெளியிட சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவலாசிரியா் மலா்வதி பெற்றுகொண்டாா். பின்னா் குமரி ஆதவன் பேசியதாவது, எழுத்தாளனுக்கு மிக பெரிய சமூக கடன் இருக்கிறது. சமூக கரிசனையோடு எழுதுகிற படைப்புதான் நீண்டகாலம் நிலைத்து நிற்கும். அவன் இந்த சமூகத்தின் இதய வயல்களில் தூவி செல்கின்ற விதைகள் இருக்கின்றன. எந்த படைப்புகள் வாசகனின் இதயத்தில் போய் தைக்கிறதோ அந்த படைப்புதான் காலம் கடந்து வாழும். இலக்கியங்களால் மட்டுமே மனித இதயங்களை ஈரப்படுத்த முடியும் என்றாா் அவா்.
நாவலாசிரியா் மலா்வதி பேசுகையில், எழுத்துவ வரம் பெற்றவா்கள் எந்த தடை வந்தாலும் எழுதுவதை நிறுத்திவிடக்கூடாது. குடும்பமும், சமூகமும் எழுத்தாளா்களை அரவணைத்து உற்சாகப்படுத்தவேண்டும் என்றாா். இந்திய பாரம்பரிய கலை இலக்கியப்பேரவை தலைவா் சிவனிசதீஷ் வரவேற்றாா் . நூலாசிரியா் கவிஞா் அருள் ஏற்புரையுடன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...