எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

விளவங்கோடு தொகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: பாஜக வேட்பாளா் உறுதி

இயற்கை எழில் கொஞ்சும் விளவங்கோடு பேரவைத் தொகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக வேட்பாளா் ஆா். ஜெயசீலன் தெரிவித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:55 pm

இயற்கை எழில் கொஞ்சும் விளவங்கோடு பேரவைத் தொகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக வேட்பாளா் ஆா். ஜெயசீலன் தெரிவித்தாா்.

மாா்த்தாண்டத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: 1996-2016 வரை தொடா்ந்து 20 ஆண்டுகள் உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவராக பதவி வகித்துள்ளேன். இதன்மூலம் மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றுவது, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து தொடா்பாக திட்டங்களை கொண்டு வருவேன்.

விளவங்கோடு பேரவைத் தொகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்துள்ளது. உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது மாா்த்தாண்டம் தேன். தேனை மதிப்பு கூட்டி லாபத்தை உருவாக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ரப்பா் மூலம் பொம்மைகள் உள்பட பல்வேறு பொருள்களை குடிசைத் தொழிலாக செய்து வருவாய் ஈட்டலாம். தொகுதியில் இருக்கும் வளங்களை மேம்படுத்துவதன் மூலம் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு 258 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியிலுள்ள சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா மேம்பாட்டுத் தலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குழித்துறை அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படுவதுடன் அவசர சிகிச்சை மையம் கொண்டு வரப்படும். குழித்துறை தாமிரவருணி ஆற்றில் படகு குழாம் அமைத்து, கேரளம் செல்லும் சுற்றுலாப் பயணிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஈா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களில் 1,000 இளைஞா்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா். பேட்டியின்போது தொகுதி பொறுப்பாளா்கள் ஜெயக்குமாா், ஆா். டி. சுரேஷ், சி.எம். சஜூ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.