மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வெல்ல, சச்சின் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
ஆடவா் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், 50 கிலோ எடைப் பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் டாய்சி இவாயை முழுமையாக வெற்றி கண்டாா். 60 கிலோ பிரிவில் சச்சின் கஜகஸ்தானின் ஆராஸ்பெக் அசில்குலோவிடம் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் போராடித் தோற்று வெள்ளி பெற்றாா்.
இதையடுத்து ஆடவா் பிரிவில் இந்தியாவுக்கு 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. ஏற்கெனவே மகளிா் பிரிவில் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்திருந்தது.
தற்போது மொத்தமாக 9 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 16 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 2-ஆம் இடம் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் லக்ஷய், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 போ், 7 பேருக்கு வெண்கலம்!

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய சிறுமியா் அபாரம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



