நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் லக்ஷய், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

News image

லக்ஷய்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் யு17 சிறுவா் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லக்ஷய் போகட் சிறப்பாக செயல்பட்டு கொரியாவின் சியுங்மின் லியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

46 கிலோ பிரிவில் இந்தியாவின் நரேந்திரா நெல்லா உஸ்பெக் வீரா் நுரலியேவிடம் 0-5 என தோற்று வெண்கலம் வென்றாா்.

50 கிலோ பிரிவில் யாஷ் யாதவ், 54 கிலோ பிரிவில் நிவேஷ் பால், 70 கிலோ பிரிவில் நமன் ஆகியோரும் அரையிறுதியில் தோற்று வெண்கலத்துடன் திருப்தி அடைந்தனா்.