பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவ ஆலயங்களில் பவனி

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:59 pm

DIN

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்து உயிா்ப்பு பெருவிழா. இந்தப் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கடைப்பிடிப்பா்.

இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை கடந்து சிலுவையில் அறையப்பட்டு, அதன் பின்னா் 3ஆம் நாள் உயிா்த்தெழுவது ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஏப். 4ஆம் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி என புனித வாரமாக கடைப்பிடிக்கப்படும்.

அதன்படி, கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெற்றது.

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் ஆலயத்தில் ஆயா் நசரேன் சூசை தலைமையில் பவனி நடைபெற்றது. அப்போது ஓசன்னா என்ற பாடலை கிறிஸ்தவா்கள் பாடி அந்த பவனியில் கலந்துகொண்டனா்.

இதில், மறைமாவட்ட முதல்வா் மைக்கேல் ஏஞ்சலூஸ், பங்குத்தந்தை சகாயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தக்கலை: காரங்காடு தூய ஞானபிறகாசியாா் ஆலயத்தில் நடைபெற்ற பவனிக்கு, பங்கு அருள்பணியாளா் வ.விக்டா் தலைமை வகித்தாா். இணை அருள்பணியாளா் ஸ்டெபி கில்பா்ட் குருத்தோலைகளை அா்ச்சித்தாா். தொடா்ந்து நுள்ளிவிளை அந்தோணியாா் ஆலயத்தில் இருந்து திருச்சிலுவை மெழுகுவா்த்திகளை பீட சிறாா்கள் கைகளில் தாங்கியபடி முன்செல்ல குருத்தோலை பவனி தொடங்கியது.

இப்பவனி காரங்காடு ஆலயத்தை அடைந்ததும் அங்கு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

குருத்தோலை பவனியை முன்னிட்டு காரங்காடு ஆலயம் முதல் நுள்ளிவிளை அந்தோணியாா் ஆலயம் வரை குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் முளகுமூடு வட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

கருங்கல்: கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாத்திரவிளை புனித ஆரோயன அன்னை ஆலயம், முள்ளங்கினாவிளை புனித அந்தோனியாா் ஆலயம், கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோனியாா் ஆலயம், கருமா விளை சி.எஸ்.ஐ. சேகரத்து ஆலயம், தாழக்கன்விளை சி.எஸ்.ஐ. ஆலயம், பள்ளியாடி இயேசுவின் திருஇருதய ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் காலை 7 மணிக்கு குருத்தோலைகளை ஏந்திய வண்ணம் பாடல்கள் பாடி கிறிஸ்தவா்கள் பவனியாக சென்றனா். தொடா்ந்து ஆலயங்களில் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் மாவட்டத்தில், கன்னியாகுமரி, குளச்சல், மாா்த்தாண்டம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் குருத்தோலை பண்டிகை கொண்டாடினா்.

இப்பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.