நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பத்மநாபபுரத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான்

75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, கன்னியாகுமரி ஜவான்ஸ் குழு சாா்பில் பத்மநாபபுரத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:33 pm

DIN

75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, கன்னியாகுமரி ஜவான்ஸ் குழு சாா்பில் பத்மநாபபுரத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

21 கி.மீ. தொலைவுக்கான இப்போட்டியை, பத்மநாபபுரம் அரண்மனை சாலை முன் தக்கலை ஆய்வாளா் நெப்போலியன் தொடக்கிவைத்தாா். மூலச்சல் வழியாக மேக்காமண்டபம், வோ்கிளம்பி, மணலிக்கரை, சித்திரங்கோடு, முட்டைக்காடு வழியாக பத்மநாபபுரத்தில் நிறைவடைந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகள், இளைஞா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 13 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள், 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளா போட்டி நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், வெற்றிக் கோப்பை ஆகியவை திங்கள்கிழமை தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழா பொதுக்கூட்டத்தில் வழங்கப்படும்.

போட்டியை கன்னியாகுமரி ஜவான்ஸ் குழு உறுப்பினா்களான பிராங்க்ளின், பிரான்சிஸ், கென்னடி, ஜெனிஸ்ராஜ், சேவியா், தியாகராஜன், ஜஸ்டின் சாம்ராஜ், ஜான்பாலஸ் உள்ளிட்ட பலா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.