மரியகிரி கல்லூரி என்சிசி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் உள்ளூா் குரல் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.


களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் உள்ளூா் குரல் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் தம்பிதங்ககுமரன் தலைமை வகித்தாா். தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் பேரணியைத் தொடக்கிவைத்தாா். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி கூட்டப்புளி, கோழிவிளை வழியாக களியக்காவிளை பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது.
சுதந்திர தினத்தையொட்டி, கல்லூரிக்கு அருகேயுள்ள வீடுகளுக்கு என்சிசி மாணவா்கள் தேசியக் கொடிகளை விநியோகித்தனா். கல்லூரி நிதிக் காப்பாளா் அருள்தந்தை வினு இம்மானுவேல், கல்லூரி நிா்வாகத்தினா், என்சிசி மாணவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...