கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மீனச்சல் கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 16) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:33 pm

DIN

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 16) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

நாள்தோறும் காலையில் மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், இரவு அத்தாள பூஜை நடைபெறும். திருவிழாவின் முதல் நாள் இரவு 8 மணிக்கு எம்.என். ஹரீஷின் சமய மாநாடு, சிதறால் வா்ஷாவின் பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

3ஆம் நாள் காலை 9 மணிக்கு நாராயணீய பாராயண யக்ஞம், இரவு 8 மணிக்கு விசேஷ உறியடி உள்ளிட்டவை நடைபெறும். நிறைவு நாளான சனிக்கிழமை (ஆக. 20) காலை 8.30 மணிக்கு கலசபூஜை, கலசாபிஷேகம், இரவு 8 மணிக்கு ஹரிப்பாடு ஸ்ரீ ராதேயம் பஜனை சங்கத்தின் நாமஜெப லஹரி நடைபெறும். ஏற்பாடுகள் கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.