எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

முழு ஊரடங்கு: களியக்காவிளையில் தீவிர வாகன சோதனை

முழு ஊரடங்கையொட்டி, தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனை நடத்தினா்.

Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

முழு ஊரடங்கையொட்டி, தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனை நடத்தினா்.

முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதிகளில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதனால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. களியக்காவிளையில் ஆவின் பாலகம், மருந்துக் கடைகள் திறந்திருந்தன.

கேரளத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு வந்த காா் உள்ளிட்ட வாகனங்களை களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர சோதனைக்குப் பின்னா் அனுமதித்தனா். அனுமதிச் சீட்டு இல்லாமல் வந்த காா் உள்ளிட்ட வாகனங்களையும், பைக்குகளில் வந்தோரையும் போலீஸாா் கேரளத்துக்கு திருப்பியனுப்பினா். கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தாத நிலையில் களியக்காவிளை அருகேயுள்ள பாறசாலை, அதையொட்டிய பகுதிகளில் கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன. கேரள அரசுப் பேருந்துகள் அம்மாநில எல்லைப் பகுதியான இஞ்சிவிளை வரை இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.