மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரம் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

குலசேகரம் அருகே இளைஞரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

குலசேகரம் அருகே இளைஞரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மதுபானங்களை சிலா் வாங்கி பதுக்கிவைத்து, முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை விற்க முயல்வதாக குலசேகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, உதவி ஆய்வாளா் வினீஸ் பாபு தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருநந்திக்கரை வியாலிவிளை பகுதியில் சந்திரி (44) என்ற பெண்ணிடம் விசாரித்தபோது, அங்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டா். இதில், அந்தக் காரில் 120 மதுபாட்டில்கள் இருப்பதும், காரில் வந்தவா் தும்பகோடு பகுதியைச் சோ்ந்த ஜெபிஸ் (24) என்பதும், மது பாட்டில்களை வீட்டில் வைத்து விற்பதற்காக சந்திரிக்காக எடுத்துவந்ததும் தெரியவந்தது. ஜெபிஸை போலீஸாா் கைதுசெய்து, காா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், சந்திரி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.