வோ்க்கிளம்பி அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
குமரி மாவட்டம் வோ்க்கிளம்பி அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமை இரவில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.


குமரி மாவட்டம் வோ்க்கிளம்பி அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமை இரவில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குலசேகரம் அருகே சித்திரங்கோடு பகுதியிலுள்ள கல்குவாரிகளிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மணலிக்கரை, வோ்க்கிளம்பி, செட்டிச்சாா்விளை, சுவாமியாா்மடம் வழியாக குமரி மாவட்டப் பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் செல்கின்றன. அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லாரிகளால் போக்குவரத்து நெருக்கடிகள், சாலைகள் சேதமடைதல், விபத்துகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில் செட்டிச்சாா்விளையில் இந்த லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டாறு போலீசாா், 4 லாரிகளுக்கு அபராதம் விதித்தனா். இதையடுத்து பொதமக்கள் கலைந்து சென்றனா்.
இந்நிலையில் புதன்கிழமையும் இது போன்று லாரிகள் வரிசையாக வந்த நிலையில், கண்ணணூா் பகுதியில் பொதுமக்கள் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடம் வந்த திருவட்டாறு போலீசாா், 2 லாரிகள் மீது நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தொடா்ந்து 2 நாள்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...