திற்பரப்பு அருகே பாலத்திலிருந்து குதித்து இலைஞா் தற்கொலை
திற்பரப்பு அருகே பாலத்திலிருந்து குதித்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.


திற்பரப்பு அருகே பாலத்திலிருந்து குதித்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
காமூா் குஞ்சுவீட்டுவிளையைச் சோ்ந்த நாகமணி மகன் ரமேஷ் (30). திருமணமாகாதவா். வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை பிற்பகலில் கோதையாறு பாயும் கையாலக்கல் ஒருநடைக்கல் பாலத்தில் இருந்து ஆற்றின் படித்துறையில் குதித்துள்ளாா். அங்கிருந்தவா்கள் ஓடிச் சென்று பாா்த்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்துத.
இத்தகவலறிந்த குலசேகரம் மற்றும் கடையாலுமூடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா். எனினும், காவல் நிலைய எல்கை குறித்த குழப்பத்தில், வழக்குப்பதிவு செய்யயப்படாமல் சடலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட,து. எந்த போலீஸாா் விசாரிப்பது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...