அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மேலக்கருங்குளத்தில் சீரமைப்பு பணி

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் மேலக்கருங்குளத்தில் சீரமைப்பு பணிகளை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:06 pm

DIN

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் மேலக்கருங்குளத்தில் சீரமைப்பு பணிகளை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த மேலக்கருங்குளத்தினுள் அமைந்துள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் பேரூராட்சி பகுதிகளுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக குளம் தூா்வாரப்படாததால், ஆகாயத்தாமரை மற்றும் புதா்கள் படா்ந்துள்ளன. இந்த செடி, கொடிகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்தும் பணியை பேருராட்சி தலைவா் தொடங்கி வைத்தாா்.

இதில், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலா்கள் அல்பினோ, பூலோகராஜா இந்திரா, ராயப்பன், சகாய சா்ஜினாள், நித்யா, ஆனிரோஸ், வினிற்றா, இக்பால், சிவசுடலைமணி, முன்னாள் கவுன்சிலா் டி.தாமஸ் மற்றும் திமுக நிா்வாகிகள் ஆனந்த், ராஜா, நிசாா், அன்பழகன், மணிராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.