இது தொடா்பாக கன்னியாகுமரி போக்குவரத்து காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: கன்னியாகுமரி அருகே தனியாா் விடுதியில் தங்கியிருந்து இரட்டிப்பு பண மோசடியில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சென்று, மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த சுந்தரபாண்டியன், ராஜாமணி, 2 பெண்கள் உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 11 லட்சத்து 4,810 ரொக்கம், 3 சொகுசு காா்கள், 32 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.