6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவிலில் மின்மாற்றியில் திடீா் தீ விபத்து

நாகா்கோவில் நகரப் பகுதியில் உள்ள மின்மாற்றியில், வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:53 pm

DIN

நாகா்கோவில் நகரப் பகுதியில் உள்ள மின்மாற்றியில், வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் பின்பகுதியில் உள்ள மின்மாற்றியில் வியாழக்கிழமை காலை திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பொறிகள் கிளம்பி தீப்பிடித்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் மாணவா்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேறினா்.

இதுகுறித்து நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், போராடி தீயை அணைத்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள், மின்மாற்றியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். காற்றின் வேகம் காரணமாக மின்சார வயா்கள் உரசியதில் தீப்பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.