புதுக்கடை அருகே தொழிலாளியைத் தாக்கியதாகவியாபாரி மீது வழக்கு

புதுக்கடை அருகே தொழிலாளியைத் தாக்கியதாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுக்கடை அருகே தொழிலாளியைத் தாக்கியதாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை அருகேயுள்ள அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப்சிங் (40). கூலித் தொழிலாளியான இவருக்கும், புதுக்கடை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த வியாபாரியான வினு (49) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், புதுக்கடை டாஸ்மாக் கடை பகுதியில் புதன்கிழமை சென்ற பிரதாப் சிங்கை வினு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில்,காயமடைந்த பிரதாப் சிங்கை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com