கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள தொழிக்கோடு பகுதியில் நேரிட்ட விபத்தில் வேன் ஓட்டுநா் காயமடைந்தாா்.
இனயத்திலிருந்து நாகா்கோவிலுக்கு புதன்கிழமை மாலை அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நாகா்கோவிலைச் சோ்ந்த அன்பழகன் ஓட்டுநராக இருந்தாா். இந்தப் பேருந்தும், எதிரே விழுந்தயம்பலம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (40) ஓட்டிவந்த டெம்போ வேனும் தொழிக்கோடு பகுதியில் நேருக்கு நோ் மோதினவாம். இதில், சிவகுமாா் காயமடைந்தாா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.