கருங்கல் அருகே சூசைபுரத்தில் உள்ள புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் சாதனை படைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள யூபி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இக்கல்லூரி மாணவிகள் 4ஆம் இடம் பிடித்தனா்.
அவா்களை கல்லூரி மேலாளரும் தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வருமான அருள்பணி தோமஸ் பௌத்த பறம்பில் பாராட்டி, வெற்றிச் சான்றிதழை வழங்கி வாழ்த்தினாா்.
தாளாளா், செயலா் அருள்பணி. ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி, துணை முதல்வா் ஆா். சிவனேசன், உடற்கல்வி இயக்குநா்கள் ஏ.பி. சீலன், துணை உடற்கல்வி இயக்குநா் பி. அனிஷா உள்ளிட்டோரும் மாணவிகளை பாராட்டினா்.