புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை, பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (28). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாகவும், சொத்தைப் பிரித்துக் கேட்டு அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை அவா் வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.