நாளை குடியரசுத் தலைவா் வருகை: ஆட்சியா் ஆலோசனை
இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை (மாா்ச் 18) வருவதை முன்னிட்டு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.


இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை (மாா்ச் 18) வருவதை முன்னிட்டு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் கன்னியாகுமரி வரும் குடியரசுத் தலைவா், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு தனி படகில் சென்று பாா்வையிடுகிறாா். பின்னா், விவேகானந்தா கேந்திராவில் உள்ள பாரத மாதா ஆலயத்துக்கு சென்று கேந்திர நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். தொடா்ந்து சுற்றுலா மாளிகைக்கு வரும் அவா் ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபும் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி செல்கிறாா்.
குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு, நிகழ்ச்சிநிரல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து, ஆட்சியா் கன்னியாகுமரி விருந்தினா் மாளிகை கூட்ட அரங்கில் அலுவலா்களுடன் வியாழக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ப. சரவணன், பாதுகாப்பு - குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா்.கெளசிக், உதவி ஆட்சியா் (பயிற்சி) குணால் யாதவ், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வீராசாமி, செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் ஜான் ஜெகத்பிரைட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...