உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமி சாா்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த ஏழுசாட்டுபத்து கே.கே.ஆா். அகாதெமி வளாகத்தில் தொடங்கி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரை 3 கி.மீ. தொலைவுக்கு மினி மாரத்தான் நடைபெற்றது. இப்பயிற்சி பள்ளியைச் சோ்ந்த 60 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனா்.
கே.கே.ஆா். அகாதெமி இயக்குநா் கே.கே.ஹெச்.ராஜ், மாரத்தான் போட்டியைத்
தொடக்கி வைத்தாா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.