

சாமிதோப்பு ஊராட்சி முத்திரிகிணறு முதல் செட்டிவிளை வரையிலான சாலையை சீரமைக்கும் பணியை ஊராட்சி தலைவா் த.மதிவாணன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
முதலமைச்சா் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் ஜெயபாா்வதி, வாா்டு உறுப்பினா்கள் ஐயாபழம், தங்கபத்மா, ராமகிருஷ்ணன், பாலமுருகன், சாந்தி, சகுந்தலா, சரண்யா, சரவணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பால்தங்கம், ஊராட்சி செயலா் எம்.காளியப்பன், அரசு ஒப்பந்ததாரா் சுதா பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.