தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தூத்துக்குடி, கன்னியாகுமரி பறக்கும்படை தீவிர சோதனை

தூத்துக்குடி, கன்னியாகுமரி பறக்கும்படை தீவிர சோதனை

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:32 pm

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, இம்மாவட்டத்தில் பறக்கும் படையினா் 36, நிலையான கண்காணிப்பு படைகள் 36 என மொத்தம் 72 குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15 லட்சத்து39 ஆயிரத்து 700, நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 820, பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.1 லட்சத்து 800, விளவங்கோடு தொகுதியில் ரூ.86 ஆயிரம், கிள்ளியூா் தொகுதியில் ரூ. 1லட்சத்து 18 ஆயிரம் என ரூ. 20 லட்சத்து 94 ஆயிரத்து 320 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேயா், எம்.பி. வாகனங்கள் சோதனை:

நாகா்கோவில் வடசேரி பகுதியில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ரெ.மகேஷ் காரில் பறக்கும் படையினா் சோதனை செய்தனா்.

தக்கலையிலிருந்து நாகா்கோவில் நோக்கி வந்த விஜய்வசந்த் எம்.பி.யின் காரையும் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இரு காா்களிலும் பணம், பொருள் எதுவும் சிக்கவில்லை.

கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு கொண்டு வந்த ரூ. 20.93 லட்சத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

விளவங்கோடு துணை தாசில்தாா் லீலாபாய் தலைமையிலான தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலையில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வந்த காரில் ரூ. 20 லட்சத்து 90 ஆயிரத்து 440-ஐ பறிமுதல் செய்தனா். நெய்யாற்றின்கரை பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குச் சொந்தமான பணம் மாா்த்தாண்டம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் சிக்கியுள்ளது. விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எம். சங்கரலிங்கத்திடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி மேகலா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு காரில் திமுக சின்னம் பொறித்த தொப்பி, ஸ்டிக்கா், கீ செயின் உள்ளிட்ட பொருள்களை அவா்கள் கைப்பற்றினா். காரை ஓட்டி வந்த நபரையும் தென்பாகம் போலீஸில் ஒப்படைத்தனா்.