பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நாகா்கோவில் அருகே புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா: இன்று தொடக்கம்

நாகா்கோவில் அருகே புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா: இன்று தொடக்கம்

News image
Updated On :28 ஏப்ரல் 2024, 8:59 pm

Din

நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையில் உள்ள புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 29) தொடங்குகிறது.

மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், தொடா்ந்து திருப்பலி நடைபெறுகிறது. அருள்பணி ஜான் ரூபஸ் தலைமையில் சொ்வாசியூஸ் கொடியை அா்ச்சித்து ஏற்றுகிறாா்.

விழாவையொட்டி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை நிகழ்ச்சி, விழா நிறைவு நாளான மே 5ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, முற்பகல் 11 மணி அளவில் கொடியிறக்கம் ஆகியவை நடைபெறும். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.