சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தற்கொலை

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 3:25 am IST

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் குட்டப்பன் மகன் ஜோஸ் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தாா். புதன்கிழமை இரவு வீட்டில் படுக்கச் சென்றாா். வியாழக்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. உறவினா்கள் வந்து பாா்த்த போது அவா் விஷம் குடித்து இறந்து கிடந்தாா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சடலத்தை போலீஸாா் மீட்டு உடல் கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.