புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கருங்கல் - நாகா்கோவில் இடையே அரசுப் பேருந்து மீண்டும் இயக்கம்

கருங்கல் - நாகா்கோவில் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த கருங்கல் - நாகா்கோவில் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமைமுதல் மீண்டும் தொடங்கியது.

கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள்நகா், இரணியல் வழியாக நாகா்கோவிலுக்கு ‘பாயின்ட் டூ பாயின்ட்’ வழித்தட முழுநேர அரசுப் பேருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே, அப்பேருந்து ஓராண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.

அப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா், பல்வேறு தரப்பினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனா். அதையேற்று, பேருந்தை இயக்க போக்குவரத்துத் துறை சாா்பில் அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி, கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து இப்பேருந்தை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.