கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி வழிகாட்டுதலின் படி வியாழக்கிழமை மாணவா் சோ்க்கைகான சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கும்பகோணம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மா. அய்யாகண்ணு மாணவா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் , ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் கோ. சாந்தி வரவேற்றாா். நிறைவாக இடைநிலை ஆசிரியை பா.சுதா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


