விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

News image

கீழக்கோட்டை அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படத்தை பாா்வையிட்ட மாணவ, மாணவிகள்.

Updated On :25 ஜூன் 2026, 2:21 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி, சிறாா் திரைப் படங்கள் மாதம்தோறும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருகின்றன. இதன்படி, கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘தி லிட்டில் பிரின்ஸஸ்’ என்ற சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்வுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவருமான ஆரோக்கியசாமி, சிறாா் திரைப்படங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். திரைப்படம் குறித்து மாணவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கணித ஆசிரியை மீனாட்சி, ஆங்கில ஆசிரியை கீதா, ஆசிரியை வாசுகி, ஆசிரியா் ஜோசப், கணினி பயிற்றுநா் வித்யா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.