மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற இளைஞா் கைது

இரணியல் அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 9:05 pm

Din

இரணியல் அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியை சோ்ந்தவா் ஜோசப் மகன் அஜின் ஜோஸ் (27). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் அஜின் ஜோஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்ததன் பேரில் காவல்துறையினா் தேடி வந்தனா்.

குருந்தன்கோடு அம்மன் கோயில் பகுதியில் இரணியல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றபோது அங்கு நின்ற அஜின் ஜோஸை பிடிக்க முயன்றனா். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் சுற்றிவளைத்து அஜின் ஜோஸை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.